Saturday 23 March 2013

TNTET TAMIL 002

ஆசிரியர் தகுதித் தேர்வு : தமிழ் வினா-விடை


  

பறவைகள்


* பருவ காலத்தை மனிதர்களுக்கு உணர்த்துபவை - பறவைகள்

* உலகம் முழுவதும் மரம், செடி, கொடிகளை பரப்புவது - பறவைகள்

.
* நம் நாட்டில் சுமார் 2400 வகைப்பறவைகள் உள்ளன.


* சமவெளி மரங்களில் வாழும் பறவைகள் - மஞ்சள் சிட்டு, செங்காகம், சுடலைக்குயில், பனங்காடை, தூக்குணாங்குருவி.

* நீர் நிலைகளில் வாழும் பறவைகள் - கொக்கு, தாழைக்கோழி, பவளக்காலி, ஆற்று உள்ளான், முக்குளிப்பான், நாரை, அரிவாள் மூக்கன், கரண்டி வாயன், ஊசிவால் வாத்து.


* மலைகளில் வாழும் பறவைகள் - கிருவாச்சி, செந்தைப் பூங்குருவி, மின்சிட்டு, கருஞ்சின்னான், நீலகிரி நெட்டைக்காலி, பொன் முதுகு, மரங்கொத்தி, சின்னங்குறுவான், கொண்டை உழவாரன், இராசாளிப்பருந்து, பூமன் ஆந்தை.











* பறவைகள் பருவ நிலை மாற்றத்தால் இடம் பெயருவதை - வலசை போதல் என அழைப்பர்.

* வெயிலும், மழையும், பனியும் மாறி மாறி வருவதை - பருவநிலை மாற்றம் என அழைப்பர்.


* அதிக பனிப்பொழியும் மாதம் - மார்கழி மாதம்.


* அதிகம் வெயில் அடிக்கும் காலத்தை - கோடைக்காலம் என அழைப்பர்.


* நிலத்திலும், அதிக உப்புத் தன்மையுள்ள நீரிலும்; கடும் வெப்பத்தை எதிர் கொள்ளும் தன்மையுடைய பறவை - பூ தாமரை.








* தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்கள்:




வேடந்தாங்கல், கரிக்கிளி(காஞ்சிபுரம் மாவட்டம்)

, கஞ்சிரால்குளம், சித்திரஸ்குடி, மேலக் செல்வனூர் (இராமநாதபுரம் மாவட்டம்),
 பழவேற்காடு (திருவள்ளுவர் மாவட்டம்), 
உதயமார்த்தாண்டபுரம்(திருவாரூர் மாவட்டம்),
 வடுவூர் (தஞ்சை மாவட்டம்) 
கரைவெட்டி(பெரம்பலூர் மாவட்டம்),
 வேட்டங்குடி(சிவகங்கை மாவட்டம்), வெள்ளோடு (ஈரோடு மாவட்டம்), கூந்தன்குளம் (திருவெல்வேலி மாவட்டம்),
 கோடியக்கரை(நாகப்பட்டினம் மாவட்டம்).



* தமிழ்நாட்டில் பட்டாசு வெடிக்காத ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூந்தன் குளம்.

No comments:

Post a Comment