Saturday 23 March 2013

TNTET TAMIL 003

ஆசிரியர் தகுதித் தேர்வு : தமிழ் வினா-விடை







திருவருட்பா

* திருவருட்பாவை எழுதியவர் - இராமலிங்க அடிகளார்
* சிறப்பு பெயர் - திருவருட்பிரகாச வள்ளலார்
* பிறப்பிடம் - கடலூர் மாவட்டம் மருதூர்

* பெற்றோர் - இராமையா - சின்னமையார்
* வாழ்ந்த காலம்: 05.10.1823 முதல் 30.01.1874
* எழுதிய நூல்கள்: ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறைகண்ட வாசகம்.
* பசித்துயர் போக்கி மக்களுக்கு உணவளிக்க இராமலிங்க அடிகளார் அமைத்தது - அறச்சாலை
* அறிவு நெறி விளங்க வள்ளலார் நிறுவியது - ஞானசபை



* சமர சன்மார்க்க நெறிகளை வழங்கிய
தமிழ்த்தாத்தா உ.வே.சா
* உ.வே.சா - உத்தமதானபுரம் வேங்கட சுப்பையர் மகன் சாமிநாதன்.
* உ.வே.சாவின் இயற்பெயர்- வேங்கடரத்தினம், அவரது ஆசிரியர் அவருக்கு சூட்டிய பெயர் - சாமிநாதன்.
* உ.வே.சா பிறந்த ஊர் - திருவாரூர் மாவட்டத்தில் உள்ள உத்தமதானபுரம்.
* உ.வே.சாவின் காலம் - 19.02.1855 முதல் 24.04.1942 வரை

* உ.வே.சாவின் ஆசிரியர் - மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை.
* உ.வே.சாவின் பெயரால் சென்னை பெசன்ட் நகரில் 1942ல் நிறுவப்பட்ட நூல் நிலையம் இன்றும் செயல்பட்டு வருகிறது.
* உ.வே.சா ஓலைச்சுவடிகளை பதிப்பித்ததால் பதிப்புத்துறையின் வேந்தர் என அழைக்கப்படுகிறார்.
* உ.வே.சாவுக்கு திருவாரூர் மாவட்டம் உத்தமதானபுரத்தில் நினைவு இல்லம் உள்ளது.
* உ.வே.சாவுக்கு தட்சணாமூர்த்தி கலாநிதி என்று பெயர் வழங்கியவர் - சங்கராச்சாரியார்.
* உ.வே.சாவின் வாழ்க்கை வரலாற்று நூல் "என் சரிதம்" (ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது)



 இராமலிங்க அடிகளார்.


* இராமலிங்க அடிகளார் பாடிய பாடலின் தொகுப்பிற்கு பெயர் - திருவருட்பா.
* வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய மனம் கொண்டவர் - இராமலிங்க அடிகளார்
* வள்ளலார் பாட்டை "மருட்பா" என்று கூறியவர் - ஆறுமுக நாவலர்.
* கடவுளை "கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்", என்றும் "உயிரில் கலந்தான் கருணை கலந்து" என்றும் பாடியவர் - இராமலிங்க அடிகளார்.



இசையமுது, 

* எழுதியவர் - பாரதிதாசன்
* இயற்பெயர் - கனக சுப்புரத்தினம்
* சிறப்பு பெயர் - புரட்சிக்கவிஞர், பாவேந்தர்.
* காலம்: 29.04.1891 - 21.04.1964(அகவை 72)
பெற்றோர்: கனகசபை முதலியார் - இலக்குமி அம்மாள்
திருமணம்: 1920ல் பழநி அம்மையாரை மணந்தார்.
* படைப்புகள்: பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இருண்ட வீடு, குடும்ப விளக்கு.

* கல்லாத பெண்களின் இழிவைக் கூறும் நூல் - இருண்ட வீடு.
* கற்ற பெண்களின் சிறப்பைக் கூறும் நூல் - குடும்ப விளக்கு.
* இயற்கையை வர்ணிக்கும் நூல் - அழகின் சிரிப்பு.
* பாரதிதாசன் நடத்திய இதழ் - குயில்.
* யார் மீது கொண்ட காதலால் தன் பெயரை பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டார் - பாரதியார் மீது கொண்ட காதலால்





No comments:

Post a Comment