Sunday 24 March 2013

JAYS TAMIL TNTET 007




தமிழ்இலக்கணம் 








தமிழ் மொழி, இயற்றமிழ், இசைத்தமிழ் மற்றும் நாடகத் தமிழ் எனமூன்று பிரிவுகளை உடையது. இவையே முத்தமிழ் எனஅழைக்கப்படக் காரணமாக விளங்குகிறது.

 நம் முன்னோர்முத்தமிழின் பிரிவுகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியேஇலக்கணம் அமைத்தனர்.

 அகத்தியம் முத்தமிழுக்கும் உரியஇலக்கண நூல் என்பர். இருப்பினும், 
பொதுவாக தமிழ்இலக்கணம் என்பது இயற்றமிழ் இலக்கணத்தைக்குறிப்பதாயிற்று. 


செய்யுள் மற்றும் உரைநடை ஆகியவற்றின்தொகுதி இயற்றமிழாகும். 

தொல்காப்பியம் இயற்றமிழில்கிடைத்துள்ள மிகப்பழைய இலக்கண நூலாகும். 


பைந்தமிழ்இலக்கணம் ஐந்து வகை.
 அவை,
1. எழுத்து
2. சொல்
3. பொருள்
4. யாப்பு
5. அணி



அறிஞர்கள் தமிழ் இலக்கணத்தை மூன்று இலக்கணம் என்றும்ஆறு இலக்கணம் என்றும் ஏழு இலக்கணம் என்றும்வகைப்படுத்துவர்.

பொருளடக்கம்

1 எழுத்து - முதலெழுத்து, சார்பெழுத்துகள்
2 எழுத்து குறித்த இலக்கணச் செய்தி
3 சொல்
4 பொருள்
5 யாப்பு


5.1 யாப்பின் உறுப்புகள்
5.2 யாப்பின் அடிப்படையில் பா வகைகள்
6 அணி



எழுத்து

முதலெழுத்து

"எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப" -தொல்காப்பியம்
உயிரும் உடம்புமாம் முப்பது முதலே - நன்னூல்



அ முதல் ஔ வரையுள்ள 12 உயிரெழுத்துகளும், 'க்' முதல் 'ன்'வரையுள்ள 18 மெய்யெழுத்துகளும் ஆகிய முப்பதும்முதலெழுத்துகள் எனப்படும்


உயிரெழுத்துகள்: உயிரெழுத்துகள் 12 அவை அ, ஆ, இ, ஈ, உ,ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ
மெய்யெழுத்துகள்: மெய்யெழுத்துகள் 18 அவை க், ங், ச், ஞ்,ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற்,ன்


ஆய்த எழுத்து : ஆய்த எழுத்து ஒன்று


உயிரெழுத்துக்கள் குறில், நெடில் என இருண்டு வகைப்படும்.மெய்யெழுத்துக்கள் வல்லினம், மெல்லினம், இடையினம் என்றுமூன்று வகைப்படும்.

சார்பெழுத்துகள்

உயிர்மெய் ஆய்தம் உயிரள பொற்றள
ப ஃகிய இஉ ஐஔ மஃகான்
தனிநிலை பத்தும் சார்பெழுத் தாகும்
-நன்னூல்


1. உயிர்மெய் எழுத்து
2. ஆய்த எழுத்து
3. உயிரளபெடை
4. ஒற்றளபெடை
5. குற்றியலுகரம்
6. குற்றியலிகரம்
7. ஐகாரக் குறுக்கம்
8. ஔகாரக் குறுக்கம்
9. மகரக்குறுக்கம்
10. ஆய்தக்குறுக்கம்


எனச் சார்பெழுத்து பத்து வகைப்படும்.

 முதலெழுத்துகளைச்சார்ந்து வருவதாலும், முதலெழுத்து திரிபு, விகாரத்தால்பிறந்ததாலும் இவை சார்பெழுத்துகள் என அழைக்கப்படுகின்ற்ன
இவ்வாறு, உயிர் எழுத்துகள் 12 , மெய் எழுத்துகள் 18 , உயிர்மெய்எழுத்துகள் (இவைகள் உயிர் மெய் இரண்டும் சார்ந்து வரல்ஆதலின் சார்பெழுத்து எனப்படும் 216) மற்றும் ஆய்தம் ஆகிய 247எழுத்துகளே, தமிழ் எழுத்துகள் எனப்படும்.


உயிர் எழுத்துக்கள்
12
மெய் எழுத்துக்கள்
18
உயிர்மெய் எழுத்துக்கள்
216
ஆய்த எழுத்து
1
தமிழ் எழுத்துக்கள் மொத்தம்
247



எழுத்து குறித்த இலக்கணச் செய்தி

எழுத்தெண்ணிச் சீரும் அடியும் வரையறுக்கும் நிலையைத்தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.
வஞ்சியுரிச்சீர், குறளடி, சிந்தடி, நேரடி, நெடிலடி, கழி நெடிலடிபோன்றவை எழுத்தடிப்படையில் எழுத்தெண்ணி சீர்களும்அடிகளுமாகும்.

வஞ்சியுரிச்சீர்

நேர் இறுதி ஐந்து எழுத்து நிரை இறுதி ஆறு எழுத்து சிறுமை மூன்றுஎழுத்து பெருமை ஆறு எழுத்து
4 முதல் 6 எழுத்து வரை - குறளடி
7 முதல் 9 எழுத்து வரை - சிந்தடி
10 முதல் 14 எழுத்து வரை - நேரடி
15 முதல் 17 எழுத்து வரை - நெடிலடி
18 முதல் 20 எழுத்து வரை - கழி நெடிலடி
மெய்யெழுத்து உயிரில் எழுத்து என்று குறிக்கப் பெறுகிறது.
ஓரடிக்கு 4 முதல் 20 எழுத்து வரை ஆசிரியப்பா வருமென்றும், 7முதல் 16 எழுத்து வரை வெண்பா வருமென்றும், 13 முதல் 20எழுத்து வரை கலிப்பா வருமென்றும் தொல்காப்பியர் குறிக்கிறார்.

சொல்


ஓர் எழுத்து தனித்து நின்றோ பல எழுத்துகள் தொடர்ந்து நின்றோபொருள் தருவது சொல் எனப்படும்.


எ.கா: வீடு, கண், போ,


சொல்லின் வகைகள்


1. பெயர்ச்சொல்
2. வினைச்சொல்
3. இடைச்சொல்
4. உரிச்சொல்

பொருள்


பொருள் இரண்டு வகைப்படும். அவை,
1. அகப்பொருள்
2. புறப்பொருள்
நம் இலக்கியஙளுக்குப் பாடுபொருள்களாக அமைவனஅகப்பொருள்களும் புறப்பொருள்களும்.ஒத்த அன்புடையதலைவனும் தலைவியும் ஒருவரையொருவர் காதலித்து நடத்தும்வாழ்க்கை நிகழ்ச்சிகளை விளக்கிக் கூறுவது அகப்பொருள்.அறம்,பொருள், வீடு ஆகிய (இன்பம் ஒழிந்த) மூன்று பேறுகளைபற்றியும், கல்வி, வீரம், கொடை, புகழ் முதலியன பற்றியும்கூறுவது புறப்பொருள்.

யாப்பு


யாப்பு என்பதற்குப் புலவர்களால் செய்யப்பெறும் செய்யுள் என்பதுபொருள். செய்யுள் இயற்றுதற்குரிய இலக்கணம்யாப்பிலக்கணமாகும்.

யாப்பின் உறுப்புகள்


1. எழுத்து
2. அசை
3. சீர்
4. தளை
5. அடி
6. தொடை


உயிர் எழுத்துக்களும், உயிர்மெய்யெழுத்துக்களும் தத்தம் ஒலிஅளவுகளைப் பொருத்து குறில் அல்லது நெடில் எனவழங்கப்படுகின்றன. குற்றெழுத்து மற்றும் நெட்டெழுத்துக்களின்அடுக்குகளை அசைகளாக வகுத்துள்ளனர். நேரசை மற்றும்நிரையசை ஈரசைகளாவன. குறிலோ நெடிலோ தனித்தோஒற்றடுத்தோ வருதல் நேரசையாகும். இருகுறிலிணைந்துவருதலும், குறில் நெடிலிணைந்து வருதலும், இவை இரண்டும்ஒற்றடுத்து வருதலும் நிரையசையாகும். ஒலிப்பியல்அடிப்படையில் அசைகளே கவிதைகளின் அடிப்படைக்கூறுகளாவன. அசைகளின் கூட்டு சீர் எனப்படும். சீர்கள்ஒன்றன்பின் ஒன்றாக வருதலால் தளைகள் உண்டாகும்.

யாப்பின் அடிப்படையில் பா வகைகள்


1. வெண்பா
2. ஆசிரியப்பா
3. கலிப்பா
4. வஞ்சிப்பா










சுட்டெழுத்துக்கள்- 



மனிதனையோ பொருளையோ சுட்டிகாட்ட உதவும் எழுத்துக்கள் சுட்டெழுத்துக்கள்.

 அவை: அ, இ பழங்காலத்தில் உ (தற்போது பயன்படுத்துவது இல்லை)
எ.கா: அப்பெண், இப்பையன், இவ்வீடு, அந்தப்பக்கம், இந்தவீடு, அ, இ சுட்டெழுத்துக்கள் தனியே நின்று சுட்டும் போது ஆண் பெண் அனைவரையும் பொதுவாக சுட்டுகின்றன.
* அகச்சுட்டு - அவன், இவன்
* புறச்சுட்டு - அப்பையன்
* சுட்டுத்திரிபு - அந்தப்பக்கம்.


தகவலை வினா ஆக்கும் எழுத்து - ஆ
எ.கா: அவன் செய்தான் - அவனா செய்தான்?
* வினா எழுப்ப உதவும் வேறு சில எழுத்துக்கள் - எ-விடை என்ன? ஏ-ஏன் வந்தாய்? யா-யார் அங்கே ? யோ- நீயோ செய்தாய்?
* சொல்லுக்கு அழுத்தம் தரும் உயிரெழுத்து - ஏ
எ.கா: அவனோ செயதான், சீதையே சிறந்தவள்.
* தற்போது ஏ க்கு பதில் தான் பயன்படுத்தும் வழக்கம் உள்ளது. அவன் தான் சிறந்தவன்.






அணி



அணி என்பதற்கு அழகு என்பது பொருள். செய்யுளில் அமைந்துகிடக்கும் சொல்லழகு, பொருளழகு முதலியவற்றைவரையறுத்துக் கூறுவது அணி இலக்கணமாகும். அணிபலவகைப்படும். அவற்றுள் சில,

1. தன்மையணி
2. உவமையணி
3. உருவக அணி
4. பின்வருநிலையணி
5. தற்குறிப்பேற்ற அணி
6. வஞ்சப் புகழ்ச்சியணி
7. வேற்றுமை அணி
8. இல்பொருள் உவமையணி
9. எடுத்துக்காட்டு உவமையணி
10. இரட்டுறமொழிதலணி








குற்றியலுகரம்



• குறுகிய ஓசையுடைய உகரம் குற்றியலுகரம்.


• கு,சு,டு,து,பு,று என்னும் ஆறு வல்லின எழுத்துகள் தனிநெடிலைச் சார்ந்து வரும்போதும், பல எழுத்துகளைச் சார்ந்து சொல்லின் இறுதியில் வரும்போதும் ஒரு மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலிக்கும். அவ்வாறு குறைந்து ஒலிக்கும் உகரம் குற்றியலுகரம்.


• நெடில் தொடர்க் குற்றியலுகரம், ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம், உயிர்த்தொடர்க் குற்றியலுகரம், வன்றொடர்க் குற்றியலுகரம், மென்றொடர்க் குற்றியலுகரம், இடைத்தொடர்க் குற்றியலுகரம் என ஆறுவகைப்படும்.


• குற்றியலுகரத்திற்கு அரை மாத்திரை


• ஈற்று அயலெழுத்தாகத் தனிநெடில், ஆய்தம், உயிர்மெய், வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றைப் பெற்று வரும்.


• நெடில் தொடர்க் குற்றியலுகரம் மட்டுமே இரண்டு எழுத்துக்களைப் பெற்று வரும். எடுத்துக்காட்டு ஆடு, மாடு, காது.




குற்றியலிகரம்:


• குறுகிய ஓசையுடைய இகரம் குற்றியலிகரம்


• நாகு+யாது = நாகியாது, வீடு+ யாது = வீடியாது, வீடு என்பன நெடில்தொடர்க் குற்றியலுகரச் சொற்கள். இவை நிலைமொழியாய் நிற்க, வருமொழியின் முதல் எழுத்து ய கரமாக இருப்பின், உகரம் இகரமாகும். இந்த இகரம்தான் குற்றியலிகரம் எனப்படும்.




முற்றியலுகரம்:


• தன்மாத்திரை அளவில் குறையாமல் இருந்தால் அது முற்றியலுகரம் எனப்படும்.


• பகு, பசு, படு, அது, தபு, பெறு இவை தனிக்குறில் எழுத்தை அடுத்து வரும் வல்லின உகரம் (கு,சு,டு,து,பு,று) பெற்ற முற்றியலுகரங்கள்.


• காணு, உண்ணு, உருமு இவற்றின் ஈற்றிலுள்ள மெல்லின (ணு, மு) உகரங்கள் முற்றியலுகரங்கள்.


• தனிக்குறிலை அடுத்துச் சொல்லின் இறுதியில் வரும் வல்லின மெய்யின் மேல் ஊர்ந்து வரும் உகரமும், பொதுவாகச் சொற்களின் இறுதியில் மெல்லின மெய்யின்மேல் ஊர்ந்து வரும் உகரமும், இடையின மெய்யின்மேல் ஊர்ந்துவரும் உகரமும் ஆகிய மூன்றும் முற்றியலுகரம் எனப்படும்.












No comments:

Post a Comment