Saturday 6 April 2013

TET SCIENCE 2


TNTET

 SCIENCE 




 காந்த வியல்:




 * காந்தத்தால் கவரப்படுவது - இரும்பு, நிக்கல், கோபால்ட்
 * காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருள் - காந்தத் தன்மை உள்ள பொருள்கள்.
 * வடக்கே நோக்கும்முனை - வடதுருவம்.
 * தெற்கே நோக்கும்முனை - தென்துருபவம்

 * காந்த ஊசிப்பெட்டியைப் பயன்படுத்தி திசையை அறிந்துக் கொள்ள முடியும்.
 * ஒய்வு நிலையில் இருக்கும்போது(தடங்கல் ஏதுமின்றி) காந்த ஊசியானது தோராயமாக வடக்கு தெற்கு திசையிலேயே நிற்கும்.
 * காந்தங்களின் எதிரெதிர் துருவங்கள் - ஒன்றையொன்று ஈர்க்கின்றன.
 * காந்தங்களின் ஒத்ததுருவங்கள் - ஒன்றையொன்று விலக்குகின்றன.
 * காந்தப் பாறைகளை மாக்னஸ் கண்டு பிடித்ததால் அதற்கு மாக்னட் என்று பெயர் வந்தது.
 * காந்தங்கள் எப்பொழுது அதன் காந்தத் தன்னையை இழந்து விடுகின்றன? - வெப்பப்படுத்தும் பொழுதும், கீழே போடும்பொழுதும், சுத்தியால் தட்டும் பொழுதும்.
 * காந்தத்தில் ஈர்ப்புச் சக்தி அதிகமுள்ள பகுதி இருமுனைகள் ஆகும்.
 * மின்காந்த தொடர் வண்டிக்கு மிதக்கும் தொடர்வண்டி என்ற பெயரும் உண்டு.
 * ஒலி நாடா, கைபேசி, தொலைக்காட்சிப் பெட்டி, குறுந்தகடு, கணிணி போன்றவற்றிற்கு அருகில் காந்தங்களை வைத்தால் அவை காந்தத்தன்மையை இழந்து விடும்.
 * புவி மிகப்பெரிய காந்தமாக செயல்வடுகிறது என்று அறிவித்தவர்? - 1600ல் வில்லியம் கில்பர்ட்.
 * ஜெயண்ட் வீல் எனப்படும் மிகப் பெரிய இராட்டினங்களை இயக்க மின் காந்தங்கள் தேவை.
 * மாக்னடைட் - ஒர் இயற்கைக் காந்தம்
 * இந்தியாவின் முதல் தொடர்வண்டி மும்பையிலிருந்து தானேவுக்கு 1853ஆம் ஆண்டு விடப்பட்டது.
 * மாலுமிகளுக்கு திசைகாட்டும் கருவியை அளித்தவர்கள் - சீனர்கள்

No comments:

Post a Comment